Wednesday, April 15, 2009

அழிவின் கத்தி The Sword of the Doom 1965 (Spoiler Alert)

வெஸ்ட்ர்ன் ரசிகர்களுக்கு சப்பானிய சாமுராய் படங்களும் பிடிக்கும். நானும் விலக்கல்ல. அகிரோவின் படங்கள் மூலமாகத்தான் எனக்கும் சாமுராய் படங்கள் அறிமுகம். சப்பானின் கடந்த ஆயிரம் வருடங்களில் 800 வருடங்கள் சாமுராய்களின் ஆட்சி தான். அது முடிவுக்கு வந்தது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில். பல சாமுராய் படங்களின் கால கட்டமும் அது தான். இந்தப் படத்தின் காலக் கட்டமும் அதே தான் 1860. இந்தப் பட்த்தின் டிவிடி பாக்ஸிர்க்குள் ஒரு இரண்டு பக்க கதை முன்னுரை. ஜெஃப் ஒபிரையானின் (Geoffrey O'Brien) கட்டுரை நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

சாமுராயாக நடித்தவரை ஏதோ படத்தில் பார்த்த ஞாபகம். சட்டென்று என்ன படம் என்று மனது சொல்லி விட்டது. அகிராவின் யோஜிம்போ (Yojimbo) என்னும் படத்தின் வில்லன் தான் அவர். டாட்சுயா நகடாய் என்னும் வில்லாளன் தான் இந்தப் படத்தின் நாயகனும். யோஜிம்போ என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு படம். இந்தப் படத்தை திரும்ப ஒரு முறை பார்த்து குறித்துக் கொள்ள வேண்டும். fistfull of dollars என்று கிளிண்ட் ஈஸ்ட்வுட்டை உச்சத்தில் ஏத்திவிட்ட, மற்றும் Last man standing என்று புரூஸ் வில்லிஸ்ஸை படுகீழே இறக்கிவிட்ட படங்களின் மூலம் தான் இந்த யோஜிம்போ. இதன் ஒருவகையில் மட்டமான காப்பியாக விஜய்யின் கடைசி வெற்றிப்படமான போக்கிரியைக் கூடச் சொல்லலாம். இந்தப் படத்தினை ஒரு வகையில் உருவின உலகின் அத்துனைப் படங்களின்/கேம்ஸ்களின் லாபத்தில் ஒரு 2 சதவிகிதம் கணக்கிட்டாலும் ராய்ல்டி கணக்கு எங்கோ கொண்டு போய் விடும். சரி அந்தக் கொடுமையை விடுவோம்.

பொதுவாக திரைப்படங்கள் கதாநாயகன்/வில்லன் என்னும் இருமுனையில் ஒன்று நன்மையாகயும், தியாகமாகவும், அழகானதும், பாசமானதும், விவேகமாகவும், வெளிச்சமாகவும் மற்றொன்று தீமையாகவும், சுயநலமாகவும், கோரமாகவும், வெறுப்பானதும், இருளானதும் என இருந்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கும் பின் இறுதியில் நன்மை வெல்லும். அப்படி இல்லாவிட்டால் நாயக முனை மட்டும் இருந்து சூழலே எதிர் வேடம் எடுக்கும் இங்கேயும் அந்த நல்ல நாயக முனை தான் வெற்றி பெறும். இன்னமும் வெற்றிப் பெறக்கூடிய சூத்திரமாக இது இருந்தாலும், 60 களில் இரு முனையையும் கொஞ்சம் கொஞ்சமாக "களங்கப்" படுத்தி விளையாடும் விளையாட்டு தொடங்கியிருக்கும் என நினக்கின்றேன்.

தன்னுடைய கலையின் அதாவது கத்தி சுழற்றும் கலையின் உச்சத்தில் இருக்கும் ஒருவனின் தீமையின் பக்கமான சரிவு என கதையின் கரு தெரிந்து ஒரு வித ஆவலுடன் பார்க்கத் தொடங்கினேன். சமீப காலப்படங்கலில் இதுப் போல தீம்கள் நிறைய இருந்தாலும், 1965ல்
எடுத்ததால் ஒரு ஆர்வம்.

கருப்பு வெள்ளைப் படங்களின் முக்கிய பலமாக நிழலை உபயோகிக்கத் தெரிந்த வலுவான கேமிரா மேன் இருக்க வேண்டும். இந்தப் படத்திற்கும் இருக்கின்றார். படம் எடுக்கும் கலையை கருப்பு வெள்ளை கொண்டு எடுத்துக் கற்றுக் கொண்டு பின் கலருக்குச் செல்ல
வேண்டும் என நினைக்கின்றேன் (Spoiler Alert)


ஒரு முதியவருடன் ஒர் சிறு வயது பெண் சாமி கும்பிடுவதற்காக மலை ஏறிக் கொண்டிருக்கின்றாள்.




முதியவரை விட்டு அவள் தண்ணிர் எடுக்க விலக முதியவரோ அருகில் இருக்கும் ஒரு சிறு புத்த கோவிலில் குனிந்து தள்ளாமையுடன் வருத்தத்துடன் "என்னை மறு உலகிற்கு எடுத்துச் சென்றுவிடு இறைவா" என வேண்டிக் கொண்டிருக்கும் போது ஏய் இங்கே வா என ஒரு குரல் கேட்கிறது. முதியவர் திரும்பிப் பார்க்க ஒரு சாமுராய் தலையில் தொப்பி மறைத்திருக்க நிற்கிறான்.




முதியவர் அருகில் சொல்ல இப்படி திரும்பு என அதட்டல் குரல் கேட்டு ஒரு நொடியில் முதியவர் கீழே சரிகிறார் இரத்தக் காயத்துடன். சாமுராய் நானே கடவுள் என்பது போல் திரும்ப கத்தியை மின்னல் வேகத்தில் திரும்ப தன் பின்புறம் சொறுகிவிட்டு, தான் செய்தது கொண்டிருந்த ஓடல் பயிற்சியைத் தொடர்கிறான். இது தான் திரைக்கதையின் ஆரம்பம்.

பயிற்சியை முடித்து விட்டு நோயுற்றிருக்கும் தந்தையைச் சென்று பார்க்கின்றார் சாமுராய். தந்தையோ ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார். நடக்க இருக்கும் ஒரு கத்திச்சண்டைப் போட்டியில் யாரோ ஒருவனிடம் அவன் வேண்டுமென்றே தோற்க்க வேண்டுமாம். அப்படித் தோற்றால் அந்த யாரோ ஒருவனின் குடும்பம் பிழைக்கும். இவனுக்கோ திறமை இருப்பதால் கவலைப் படவேண்டியதில்லை என தந்தை நினைக்கின்றார். பதில் சொல்லாமல் இருக்கின்றான் சாமுராய். யாரோ ஒரு பெண் சாமுராயைப் பார்க்க வருகின்றாள். தன் கணவன் ஜெயிக்க வேண்டும் அதனால் சாமுராய் தோற்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றாள். சாமுராயோ போட்டியில் தோற்ப்பது என்பது ஒரு பெண் கற்பிழக்கும் நிலைக்குச் சமம் என்கின்றான். அவளே கற்பிழக்க சம்மதிப்பாளா எனவும் வினவுகின்றான். அந்தப் பெண்ணின் கணவனும் சாமுராயின் தந்தை சொன்ன ஆளும் ஒருவர் தான்.

அவள் சம்மதிக்க, கணவன் அவளை சந்தேகப்பட கூடவே தனக்குள்ளாக அவமானமும் பட, சண்டையில் தவறான அடி அடிக்க முற்பட்டு சாமுராயிடம் உயிரையும் இழக்கின்றான்.





1965ல் இந்த இடத்தில் சாமுராய் மேல் கடுமையான கோபம் ஏற்பட வாய்ப்புண்டா என என்னால் ஊகிக்க முடியவில்லை. உண்மையில் எனக்கு சாமுராய் மேல் வருத்தம் தான் வந்தது. சந்தேகம் வந்து நான் தேடிப் படித்த விமர்சனங்கள் எல்லாம் சாமுராயின் சாத்தான் இந்த இடத்தில் தான் ஆரம்பிற்கின்றார் போல் எழுதியிருந்தனர். இந்தப் படம் பார்த்த, அல்லது பார்க்காதவர்கள் "தயவு செய்து" பார்த்து, இங்கேயே வேறெங்கேயோ விளக்கி எழுதினால் நன்றாக இருக்கும்.

சாமுராய் விலகிச் செல்ல வேண்டிய நிலையில் இருக்க, கூடவே விதவையான அந்தப் பெண்ணையும் சேர்த்துக் கொண்டு, சாமுராய்கள் செல்வாக்கு இழக்கும் கால கட்டத்தில் அவன் சோத்துக்கும் மத்ததற்க்கும் அலைய வேண்டியதாகியது. செத்தவனின் தம்பி , இவனைப்
பழிவாங்க அலைகின்றான். இந்தச் சூழலில் முதலில் உயிரிழந்த முதியவரின் பேத்தியும் சேர சூழலைச் சுவாரசியப் படுத்த தேவையான முனைகள் சேர்ந்தன. படமும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தது. செத்தவனின் தம்பிக்கு கத்திச் சண்டை சொல்லிக் கொடுப்பவர், அகிராவின்
ஆஸ்தான நாயகனான டோஷிரொ மிஃபூனே தான். அவரும் வியக்கும் படியான ஒரு புதிய வகையான கத்திச் சண்டை போடுபவர் தான் நம் சாமுராய்.



படத்தில் மூன்று முக்கியமான கத்திச் சண்டைகள்.இரண்டு நாம் சாமுராய் போடுவது மற்றொன்று டோஷிரா. இந்த மூன்று சண்டைகளின் ஆழமான தாக்கம் கில் பில் ( Kill Bill 1 & 2) ல் இருந்தது இப்பொழுது தான் எனக்குத் தெரிய வருகின்றது.













இது மிஃபூனேவுடைய சண்டைக் காட்சி you tubல் கிடைத்தது 4 நிமிடம் செலவழிக்க முடிந்தால் , கிளிக்கலாம். வேஸ்ட்டாக வாய்ப்பு குறைவு.


உண்மையில் இந்த கேளிக்கைத் துறைகளில் முக்கியமாக சினிமா/இசை போன்று ஒருவருக்கு மேல் இணைந்து பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்தி வரும் ஆக்கங்களின் மீதான காப்புரிமைச் சட்டம் என்பதெல்லாம் பேத்தல் என நினைக்கின்றேன். தெளிவாக எது எவனுடைய/எந்தக் குழுவினதுடைய "தனிப்பட்ட" முதல்முறையாக செய்த ஒன்று என "எதையும்" பிரிக்க முடியாது என தீவிர எண்ணம் வருகின்றது.

கடைசியில் ( நான் எதிர்பார்க்க வில்லை அது தான் கடைசி என) ஒரு சண்டை. சாமுராய் நிழல் மனிதர்களுடனும் , நிஜ மனிதர்களுடனும் ஆக்கிரோசமான் சண்டை போடுகின்றார். கூட்டம் கூட்டமாக வந்து "தலை"யிடம் வெட்டுப் பட்டுச் சாகின்றனர். "த"லைக்கும் வெட்டு உண்டு. தலையில் இருந்து இரத்தம் கண்களுக்கு வடிய துடைத்து சரிந்து துடைத்து சரிந்து கொளை கொளையாக வெட்டிச் சாக்கின்றார். வெளியில் இது தெரியாமல் , பழிவாங்க வேண்டி ஒரு தம்பி வேறு காத்துக் கொண்டிருக்கின்றார். வெட்டி வெட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு ஷாட்டில் படம் உறைந்து அப்படியே நிற்கின்றது.




பட்ச் காசடி அண்ட் சண்டான்ஸ் கிட் (Butch cassedy and sundance kid)ல் தான் கடைசி ஷாட்டில் படம் உறைந்து புதுமை செய்திருந்தார்கள் என நினைத்திருந்த எனக்கு அதிலும் மண்ணடி விழுந்தது. படம் இப்படி அரத பாதியில் நிற்கிறதே, இல்லை உண்மையில் படம் முடிந்து என் மரமண்டைக்குத் தான் உறைக்கவில்லையா என தேடிப் பார்த்தால், இது முதலில் முதல் பாகமாகத்தான் நினைத்து எடுக்கப் பட்டதாம். இரண்டாம் பாகத்தில் தன் கண்களை இழந்தும் சாமுராய் தீயப் பாதையில் மேலும் முழுக இருந்து, அந்த இரண்டாம் பாகம் எடுக்கப் படாமலே போய் விட்டதாம். எப்படியிருந்தாலும் சினிமாவினை ரசிப்பவர்கள் தவறவிடக் கூடாத படம் என்று தான் நான் சொல்வேன்.


மேலும் படிக்க

Thursday, April 09, 2009

Searchers - தேடுபவர்கள் - 1956 (Spoiler Alert)

சிறு வயதில் காமிக்ஸ் படிக்கும் காலத்தில் அறிமுகமான வெஸ்ட்ர்ன் கௌவ் பாய் கதைக் களன்கள் மீதான ஈர்ப்பு, இன்றளவும் தொடர்கின்றன. கௌவ் பாய் கதைக் களன்களின் முக்கியமாக அமெரிக்க இந்தியர்கள் வரும் களன்களில் உள்ளுர உறைந்திருக்கும் இனவெறி, ஆரம்ப காலங்களில் உறைக்காதது பல காலங்களுக்கு வருத்தத்தைத் தந்ததுண்டு. இருந்தாலும் இந்தக் கதைக் களன் மீதான ஆவல் குறையவில்லை தான்.

பல ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தை பார்த்திருந்த போது, இதனுள் உறைந்திருந்ததாக எனக்குப் பட்ட இனவெறி இந்தப் படத்தினை அவ்வளவாக அப்பொழுது இரசிக்க விடவில்லை. சில காலம் முன், இந்தப் படத்தைப் பற்றி எனக்குப் பிடித்த அமெரிக்க டைரக்டர்கள் இதைப் புகழ்ந்து பேசியதைப் படித்து , இந்தப் படத்தை திருப்பப் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். அகிரோ குரொசோவாவிற்கும் குரு எனப் பேசப்படுகின்ற இந்த்ப் படத்தின் டைரக்டர் ஜான் ஃபோர்ட் பல வெஸ்ட்ர்ன் படங்களை இயக்கி இருக்கின்றார். நான் பார்த்த இவரது சில படங்களில் அமெரிக்க இந்தியர்களை ஒரு கெட்ட காட்டுமிராண்டியாகவும், ஒரு துணிச்சலான, சொந்தமிருந்தும்/ இல்லாமலும் தனியாளான கௌபாய் ஒருவர் சாகசங்களால் "காட்டுமிராண்டி"களை வெல்லும் வகையான கதைக:ளாகத் தான் இருந்தது. ஒரு மேல் பார்வையில் இந்தப் படமும் அந்த வகைப் படமாகவே, பல வருடங்களுக்குமுன் பார்த்த போது எனக்கு இருந்தத என்பதையும் சொல்லியாக வேண்டும்

சில மாதங்களுக்கு முன், பராக் ஓபமா ஜெயித்த பிறகு பார்த்த The Birth of a nation என்னும் அப்பட்டமான இனவெறிப் படம் பார்த்த அனுபவம் தனியாக இருந்தது. சாதாரண மக்களிடையே உள்ளூர உறைந்திருக்கும் இனவெறி/சாதி வெறி/ஹிப்போகிரேசித் தனங்ளை ஒரு காலரீதியாக அந்தந்த காலகட்டங்களில் புகழடைந்த்ருக்கும் சின்மா படங்கள் (இலக்கியங்களையும் தான்) வாரியாக பார்க்கலாம் என நினைக்கின்றேன். ஒரு பழைய தமிழ்ப்படத்தில், ஒரு போலிஸ்காரர் ஒரு மிட்டாமிராசிடம் பேசும் வசனங்கள், ஒரே சட்டம் எந்த வகைகளில் மேல் மட்டத்திற்கும்/கீழ் மட்டத்திற்கும் பாய்ந்தது எனக் கோடி காட்டும். 90களில் கூட "எஜமான் காலடி மண்ணெடுத்து" எனப் பேசும் அப்பட்டமான ஜாதீய படங்களின் வெற்றி, உள்ளூர உறைந்திருக்கும் ஜாதி வெறியைத் தான் காட்டியது எனலாம். அது போலவே அமெரிக்க வெஸ்ட்ர்ன் படங்களின் ஆதிகால இனவெறிப் படங்களின் வெற்றி அந்தக் காலக்கட்டத்தின் உள்ளுரையாகக் கொள்ளலாம். 60, 70, 80களில் வந்த வெஸ்ட்டர்ன் படங்களில் அதுவும் வெற்றிபெற்ற படங்களின் போக்கு மாறிக்கொண்டிருப்பதை இந்த வகைப் படங்களை தொடர்ந்து பார்ப்போர் உணரலாம். அந்த வகைகளில் இந்தப் படமும் "அமெர்க்க இந்திய காட்டுமிராண்டித்" தனத்தைக் காட்டியதோடு நில்லாமல் வெள்ளையர்களின் காட்டிமிராண்டித்தனத்தை"யும்" காட்ட முனைந்ததாக , இப்பொழுது பார்த்த போது பட்டது. எல்லா வற்றையும் விட இந்தப் படத்தை இதன் காட்சிரூபத்திற்க்கும், உள்ளே இருக்கும் காட்சிமாந்தர்களை எந்தவகயில் உயிர் கொடுத்து அவர்களை உருவாக்கியிருக்கின்றார் அதுவும் 1956ல் என்பது தான் இந்தப் படத்தின் வெற்றி எனக் கொள்ளலாம் (Spoiler Alert)(
டெக்சாஸ் மாநிலம் - உள்நாட்டுப் போர் முடிந்து ஓரிரு வருடங்கள். முதல் காட்சியிலேயே ஒரு அற்புதமான நிழலுருவப் படம்.




பிற்காலங்களில் இந்த நிழலுருவப் படங்கள் ஒரு கிளிசேவாக மாறி அஜீர்ணப்பட்டிருந்தாலும், இந்தப் படத்தில் அதன் பழமைக்காக ரசிக்கலாம்.

எல்லைப்புரத்தில் குடியுருக்கும் ஒரு வீட்டில் கணவன் மனைவி, இரு பெண்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் இரு நாய்கள்.




அவர்கள் வீட்டிற்கு வருபவராக, உள்நாட்டுப் போரில் தோல்வியுற்ற கான்பெடரசிக் கார, எல்லைவீட்டு கணவனின் அண்ணனாக, (தம்பியாகக்கூட) கதாநாயகன் ஈதன் அறிமுகம்.




படத்தின் ஓரிரு காட்சியிலேயே இந்தக் கதாநாயகனின் கதாப்பாத்திரம் கோடுகாட்டப் படுகின்றது.




அடுத்த நாள் ஒரு பாதுகாவலர் கூட்டம் வந்து இந்தக் குடும்பத்து ஆண்களை துணைக்கு கூப்பிட வரும்போது, ஈதனுக்கும் அவனது அண்ணன் பொண்டாட்டிக்கும் இருக்கும்/ இருந்திருக்கும் உறவு கோடி காட்டப் படுகின்றது. ஈதனின் உடையை அண்ணன் பொண்டாட்டி கருனையுடன் வருடும் போதும்,





வெளியேறும் போது விடை கொடுக்கும் இடத்திலும் ,





இவர்களது உறவை, அந்தப் பாதுகாவலர் தலைவர் முகத்தில் காணலாம். இந்தப் படத்தில் இருக்கும் வெளிப்புறக் காட்சிகளின் தாக்கம், எவ்வளவோ படங்களில் வந்துவிட்டது.





பாதுகாவலர் கூட்டம் திரும்ப வீட்டிற்கு வரும்போது வீடு சின்னாபின்னப் படுத்தப்பட்டு, வீட்டின் இரு பெண்களும் அமெரிக்க இந்தியரால் தூக்கிச் செல்லப்பட்டிருப்பது தெரிகிறது. இந்தக் காட்சியின் தாக்கம் அப்படியே ஸ்டார்வார்ஸ்ஸில் உருவப் பட்டிருப்பது ஆச்சர்யம் இல்லை.




ஜார்ஜ் லூகாஸ்ஸிற்கும் ஜான் ஃபோர்ட் ஒரு ஆதர்சம் தான்.


அந்த இரு பெண்களையும் தேடிச் செல்வது தான் இந்தப் படத்தின் கதை. முதல் தேடலில் ஒரு கோட்டில் அமெரிக்க இந்தியர்களும் மறு கோட்டில் வெள்ளையர்களும் வரும் இந்தக் காட்சியும் பின்னால் பலவாறாக சுவீகாரம் செய்யப்பட்டது.



ஆரம்பத்திலேயே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு விட்டது தெரிந்து ஈதன் பழிவாங்கும் வெறியில் இருக்க, கூடவே 1/8 செரொக்கி என்னும் அமெரிக்க இந்திய ரத்தம் கொண்ட மார்டி என்னும் வளர்பு மகன் , உண்மையான தேடல் முயர்சியில், ஈதனுடன் இணைந்து கொள்கின்றான். மார்டிக்கு மற்றொரு பெண்ணான டெப்பியையாவது காப்பாற்றும் எண்ணம். நேர்வாக்கான பார்வையில் இந்த மார்டி கதாபாத்திரம் தான் கதாநயகன் போலவும் தோன்ற வைத்திருப்பதால் தான் , இந்தப் படத்தின் உள்ளுரை இனவெறி மட்டாக்கப்பட்டதாக நான் புரிந்து கொள்கின்றேன்.



இரண்டு வருட காலம் பனிக்காலத்தையும் சேர்த்து சுத்தி, ஊருக்கு வருகின்றனர் மார்டியும் ஈதனும். அங்கே இருக்கும் ஒரு வீட்டில் தான் மார்டியுன் காதலி.



துடிப்பான பெண்ணின் காதலையும்



சற்று தள்ளி வைத்துவிட்டி திரும்ப ஒரு துப்பு கிடைத்து கிளம்பும் ஈதனுடன் சேர்ந்து கொள்கின்றான் மார்ட்டி. அமெர்க்க இந்தியர்களுடன் வாழ்ந்த டெப்பியையும் கொல்லக்கூடிய வனாக வெறியேறிவிட்ட ஈதனுடன், டெப்பியை காப்பாற்றவே ஈதனுடன் கிளம்புவதாக காதலியிடம் சொல்லிச் செல்கின்றான் மார்ட்டி.

பின் ஒருவாறாக அம்ரிக்க இந்தியக் கூட்டத்தை கண்டடைகின்றனர்.



கடத்திச் சென்ற ஸ்கார் (வெட்டுக்காயம்) என்னும்அமெரிக்க இந்தியனுடன் வியாபாரம் பேசுவதாக அமர்ந்து வேவு பார்கின்றனர்.



அமெரிக்க இந்தியர்கள் வெள்ளையர்களைப் பிடித்தால் அவர்கள் தலையின் தோலை
முடியுடன் வெட்டி வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்ததை காட்டி இவர்களை மிரட்ட ஸ்கார், அந்த வெட்டிய முடிகளை இவர்களிடம் காட்ட தன் ஒரு மனைவியை ஏவுகின்றான்.




அப்பொழுது தான் ஈதனும் மார்டியும் டெப்பியை காண்கின்றனர்.




பின் அமெரிக்க படையுடன், இந்த அமெர்க்க இந்தியக் குடியிருப்பை தும்சம் பண்ணத் திட்டம் போட, மார்டி டெப்பியை காப்பாற்ற அவகாசம் கேட்டுச் செல்கின்றான்.




மார்டி டெப்பியைக் காப்பாற்ற, அமெரிக்கப் படை குடியிருப்பை தும்சம் செய்கின்றது. பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஈதனும் , ஸ்காரின் தலைமுடியை



வெட்டுவதாக காட்சியமைத்து இருந்தது "பழி வாங்கும்" உணர்ச்சியை தூக்கிக் காட்டவா அல்லது அமெரிக்க வெள்ளையினத்தின் "காட்டுமிராண்டித்தனத்தையும் "கோடு" காட்டவா என்பது விவாதத்திற்கு உரியது தான்.பின் டெப்பியையும் ஈதன் துரத்துகின்றார், மார்ட்டி தடுத்தும் கேட்காமல்.




அவளைத் துரத்திச் சென்று தூக்கி, மனம் மாறியவராக "வீட்டிற்கு போகலாம்" எனக் கூறும் போது தியேட்டர்களில் கைத்தட்டல் பிளந்திருக்கலாம்.




பின் ஊருக்கு வந்து டெப்பியைச் சேர்த்தவுடன், எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க செல்கின்றனர், ஈதனை விட்டு விட்டு. தனியாளாக




திரும்ப எங்கோ செல்வதுடன் படமும் முடிந்துவிடுகின்றது. படம் பார்த்து முடிந்தவுடன் இதன் அற்புதமான வெளிப்புறக் காட்சிகள் மனதில் இருந்ததைவிட உள்நாட்டுப் போர் அப்பொழுது தான் முடிந்ததாக காட்டப்படும் இந்தப் படத்தில் மருந்துக்கும் கருப்பினத்தவரை காண்பிக்காதது ஒருவகை உறுத்தலாக இருந்தது எனலாம். சினிமா மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புவபர்களுக்கு , இந்தப் படத்தில் பல பாடங்கள் சொல்லப் பட்டிருக்கின்றது. தவறவிடக் கூடாத படம்


மேலும் படிக்க