Monday, July 30, 2007

Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்

Wild Strawberries / காட்டுப் பழங்கள் அல்லது காட்டு ஸ்ட்ராபெரீஸ்
Bergman, ingmar / பெர்க்மென், இங்மார்

எனக்கு இங்ரிட் பெர்க்மான் தான் முதலில் அறிமுகம். காஸாபிளாங்கில் பார்த்து கிறங்கி இருந்த காலம். இவர் நடித்த படங்களைத் துரத்தி துரத்திப் பார்த்தேன். ஹிட்ச்காக்கின் படமொன்றில் கலக்கியிருந்தார்.படம் மறந்து விட்டது (சில நடிகைகள் ஏனோ சில விதத்தில் பார்த்த உடன் கவர்வார்கள் காரணம் புரியாது.

மதுபாலா போலோ அல்லது பத்மினி போல ஒரு வசீகரம் - முகத்தில்.









அதுவும் கருப்பு வெள்ளைப் படங்களில் இவர்களது வசீகரம் அதிகமாக இருக்கும். ஒரு "கலர்" படத்தில் இங்ரிடின் முக வசீகரம் அவ்வளவாக கவர வில்லை- வயதானதால் கூட இருக்கக்கூடும். அந்த சமயத்தில் என்க்கு இன்கிர்ட்டின் கணவராக இங்மார் அறிமுகம். தூய திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வரிகள் அதிர்சியாக இருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது? முதலில் பார்த்தது செவந்த் சீல் என்னும் படம். அதனது இருமையான களம் மற்றும் தத்துவார்த்த கூறுகள் படத்தை மிகவும் ரசிக வைத்த ஒன்று. வைல்ட் ஸ்ட்ராபெரீஸ் என்னும் படமும் என்னைக் கவர்ந்த படம். இதைப் பார்த்து ஓரிரு வருடங்கள் இருக்கலாம். இவர் இன்று இறந்து போவார் என்று தெரிந்து இருந்தால், இரண்டு வாரங்களாக, ஒரு முறை renew (மீள்பதிவா?) செய்தும் பார்க்க முடியாமல், கடந்த வெள்ளியன்று திருப்பிக் கொடுத்த(கொடுத்தாக வேண்டிய) Silence என்னும் படத்தைப் பார்த்து அதைப் பற்றி எழுதியிர்க்கலாம். எனவே என்னிடம் இருந்த வைல்ட் ஸ்ட்ராபெரீஸ்/ செவந்த் சீல் என்னும் இரண்டு படங்களை எதை திரும்பப் பார்ப்பது என ஒரு முடிவெடுத்து, பார்த்து இப்பொழுது ஒரு திரைப் பார்வை. ஒரு சினிமா ரசிகனாக இருந்து இதைக் கூடச் செய்யாவிட்டால் ? லிவிங் ஸ்மைல் என்னுடைய திரைப் பார்வைகளை, முழுமையாக இல்லை, பல இடங்கள் தொடர்பும் இல்லை என ஒரு நண்பியின் விமர்சனமாக சொல்லியிருந்தார். எனக்கு எழுதவராது என்றாலும், கொஞ்சம் திருத்தமாக எழுதப் பார்க்கின்றேன். கதைக் காட்சிகளை விளக்காமல், திரைப்பார்வை செய்வது எப்படி என்பது இன்னமும் கை வரவில்லை; எழுதுவதெல்ல்லாம் எனக்கே வீணாயிருப்பதால், காட்சிகளை விளக்கியே எழுதப் பார்க்கின்றேன்.

இனி,

wild straberries ஒரு நினைவோடை கதையமைப்பு கொண்டது. வயதான, ஒரு "படித்த" , "வெளி" வாழ்வின் சிகரங்களைத் தொட்ட ஒரு நபரின் பின்னோக்கிய நினைவுச் சிதறல்கள் தான் இப்படம். கருப்பு வெள்ளைப் படம். இங்மார் பெர்க்மானின் படங்கள் , தன்மயமான கருத்தை, பார்வையைக், காட்டும் படங்கள்; பல சமயங்களில் நம்மையே "உள்ளே" பார்க்க வைக்கும் அளவு உக்கிரம் கொண்டவைகள். ஒரு மத்திய வயதை எட்டிய என்னையே, பல சமயம் உள்நோக்கிப் போக வைத்தது, இந்தக் கதையின் சில காட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி பின்னப்பட்ட வசனங்கள்; மிக எளிதாக மொழி மாற்றம் செய்யப் பட்ட சப்டைட்டில்கள், மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் படம் 1957ல் வந்தது, ஆனால் கதையோ இந்தக் காலத்திற்கும் பொறுந்துவது பெர்க்மானின் சிறப்பா அல்லது "வெளி" உலகில் அடைந்த மாற்றங்கள் போல அல்லாது உறைந்து கிடக்கும் "உள்" உலகமா? வியப்பாக இருக்கின்றது. இல்லாவிட்டால், 57ல் இருந்த ஸ்வீடிஸ் நடுத்தர வர்க்க மனநிலைக்கு , தமிழ் சூழலில் நாம் இப்பொழுது தான் வருகின்றோமா? மௌனியின் கதைகளின் சூழல் , இந்த மாதிரியான தன்மயப் பட்டதாக இருக்கும் (நான் படித்த சில கதைகளில்) ஆனால், அதில் இருந்த ஒரு குழம்பிய நடையோ/ குழம்பிய கருத்து மையமோ, இதில் இல்லாததாக எனக்குப் பட்டது; ஒரு நல்ல சிறுகதையைப் படித்த அனுபவம் எனக்கு இதில் கிடைத்தது எனலாம்.


முதல் காட்சியில் ஒரு வயதானவர் , தன் அலுவலக அறையில் உட்கார்ந்து இருக்கின்றார்; ஒரு நாய் அவரது காலடியில்;






கருப்பு வெள்ளைப் படங்களின் காமிராமேன் தன் பலத்தைக் காட்டக் கூடிய லைட்டிங் அமைப்பு; வெளிச்சமும் நிழலும் விழ வேண்டிய இடத்தில் மட்டும் விழுந்து காட்சியை அழகாக்கிக் கொண்டிருந்தது. வயதானவர்(78 வயது) தன்னைப் பற்றிச் சொல்லுகின்றார் அவரது மேஜையில் இருக்கும் புகைப்படங்களைக் காட்டியபடி; தான் ஒரு வேதாந்தி ( pedant) என்று உணர்ந்து சொல்லி தன்னுடைய 96 வயதில் இருக்கும் தன் தாயைப் பற்றிச் சொல்லி, தன் மனைவி பல வருடங்கள் முன் இறந்ததைச் சொல்லுகின்றார். தான் நாளை ஓரிடத்தில் கௌரவிக்கப் போவதையும் சொல்கின்றார்; பின் அவரது தூக்கத்தில் ஒரு கனவு - இந்தப் படத்தில் கனவும், அதில் வருபவைகளும் கதைக் கோர்வைக்கு முக்கியமாக இருப்பது. வயதானவர்களுக்கு வரும் செனிலிட்டி பற்றியும், அதன் ஆவேசமான Alzheimer's syndrome பற்றியும் அனுபவக் கதைக்களை கேட்டு பார்த்ததிலிருந்து அதன் உக்கிரத்தை நினைத்து ஒரு பயம். கனவுகளும் நினைவுகளும் பின்னிப் பிணந்து எதில் இருக்கின்றோம் எனத் தெரியாமல் இருக்கும் இரு வயதானவர்களைப் பற்றி , வெவ்வேறு மக்களிடம் ( ஒருவர் தமிழ்நாட்டில் வசிப்பவர்/ மற்றொருவர் பிலடெல்பியாவில் வசிக்கும் வெள்ளையர்) வெகு சமீபத்தில் அறிந்ததிலிருந்து, அதன் மீது ஒரு பயம்; இந்த வியாதி தனக்கு இருப்பது என உணரக் கூட முடியாமல் , மேலும் மேலும் மோசமாகக் கூடிய நிலை, வயிற்றில் ஒரு பயத்தை தெளிக்கும்; பெர்க்மான் செனிலிட்டியையும் / அல்கெமிர் சிண்ட்ரொம்யும் கலந்து இருக்க மாட்டர் என எனக்கு நான் முடிவு செய்து கொண்டு படம் பார்த்தேன்; அந்தப் பரிமானம் , இந்தப் படத்தை பார்க்கும் அனுபவத்தை சற்று கூட்டியிருக்கலாம். ஆனால் நான் தீர்க்கமாக முடிவெடுத்து அந்த பரிமானத்தைத் தவிர்த்தே இந்தப் படத்தைப் பார்த்தேன்


திரும்ப கனவுக்கு வருவோம்; ஒரு மதிய வேளை ; நல்ல வெயில் ; யாருமற்ற ஒரு தெரு ; தூரத்து கடிகாரத்தில் முள் எதுவும் இல்லை; இவர் நின்று பார்க்கின்றார் ;



தனது பாக்கெட் கடிகாரத்தை எடுத்துப் பார்க்கின்றார்; அதிலும் முள் இல்லை; என்ன அர்த்தம்? காலம் நின்று விட்டதா? தூரத்தில் ஒரு உருவம்; இவர் அருகில் சென்று பார்க்கின்றார் ; அந்த உருவம் செத்து விழுகின்றது ; சற்று தூரத்தில் ஒரு ரதம் ; இவரருகே வந்தவுடன் அந்த ரதம் நிதானமிழந்து, ஒரு சவப் பெட்டியை கீழே விட்டுச் செல்லுகின்றது; சவப்பெட்டியில் ஒரு கை; இவர் அருகில் சென்று அந்தக் கையைப் பிடிக்கின்றார்; பிணம் வெளிவருகின்றது ; இவர் பார்க்கின்றார் ; அது இவரே தான் ; இவரது முகமும் சவக்களை கொள்கின்றது. வயதானவர்களின் சாவைப் பற்றிய பயத்தை இதைவிட சிறப்பாக சொல்லமுடியுமா தெரியவில்லை; சமீபகால இந்தியப் பயணத்தின் போது, காலம் வேட்டையாடிக் கொண்டிருப்பதை உணர வைக்கும், என் அப்பாவின் முகத்தில் இருக்கும் அந்த ஒரு பாவனை, சாவு பயம் தானா? சிறுவயது பயணங்களில் நான் விடைபெறும் போது என் கண்ணை அந்தளவு அவர் உற்று நோக்கியதாக நினைவில்லை; இபோழுது என் கண்ணை உறைய வைப்பது போல் இருக்கும் அவரது கண்களில் தெரியும் அந்தத் தொனி சொல்வது தான் என்ன?


தடாரென்று எழுந்து, தூங்கிக் கொண்டிருக்கும் தன் வீட்டு வேலைக்காரியை எழுப்பி, தன்னுடைய வெளியூர் பயனத்திற்கு உதவுமாறு சொல்லுகின்றார்;
இவருக்கும் இவரது வீட்டு வேலைக்காரிக்கும் இடையில் நடக்கும் sparringகள் மிகவும் ரசிப்பூட்டுபவை; சற்று உலர்ந்து இருக்கும் கதை களனுக்கு, இந்த வாக்குவாதங்கள் ஒரு நல்ல bufferதான். விமான பயந்திற்கு ஆர்வமாக இருக்கும் வேலைகாரியிடம் , தான் காரிலேயே செல்வதாகக் சொல்லி கிளம்புகின்றார். அழகான அவரது மருமகளும், அவருடன் பயணிப்பதாகச் சொல்லி வருகின்றார். மகனும் மருமகளும் பிரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நேரம் அது. நகரத்தில் இருந்து கார் நகருகின்றது.




காரில் மருமகளும் மாமனாரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்; மாமனார் எந்தளவு ஒரு உருகிப் போன மனம் படைத்தவர் என விமர்சிக்கின்றார்; பெற்ற பிள்ளைக்கு படிக்க வைத்த செலவை கணக்கிட்டு கேட்பதைப் பற்றியும், பொருள் சம்பந்தமான கஷ்டங்கள் எல்லாம் பொருட்படுத்த தக்கவைகள் என்னும் அவரது வறட்டு வேதாந்த்தை விளக்கி எதனால் அவரது மகனும் மருமகளும் அவரை வெறுக்கின்றனர் என பட்டென்று போட்டு உடைக்கின்றாள்; இசாக்கிற்கு முகம் மாறுகின்றது. விரைவில் ஒரிடத்தில் காரை திருப்பி ஒரு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் செல்கின்றார். மருமகளிடம் , இந்த இடம் தன்னுடைய சிறு வயதில் கோடை காலங்களில் தன் உறவினர்களுடன் வரும் இடம் என்று சொல்லி ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்து நினைவலையை வீசுகின்றார். அந்த இடத்தில் ஒரு அழகி சாரா என்பவள் பெரீஸ் பழங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றாள்; இசாக்கின் தம்பி, இக்ரீட் அங்கு வந்து தன் அத்தை மகளோ/மாமன் மகளோ (ஸ்வீடனின் கசின் காதல்கள் எனக்கு ஆச்சர்யம் தான்)அவளிடம் காதல் தூது விடுகின்றான் ; ஒரு நிலையில் முத்தம் கூட அடித்து விடுகின்றான்; ஒரு கணத்தில் இணங்கி,




பின் வெடித்து அழுகின்றாள்; அதன் போது அவள் , இசாக்கிடம் இருக்கும் தன் விருப்பத்தையும் சொல்லி அழுகின்றாள்; படித்த இசாக்கும் பிடித்திருக்னின்றது விளையாட்டுப் பிள்ளை இக்ரிடும் பிடித்திருக்கின்றது - என்ன செய்ய? ந்னைவோடையில் , இசாக் இதை ரசித்துப் பார்க்கின்றார். நினைவோடை சமயத்தில் இசாக் , தன் தற்கால உருவத்துடன் படத்தில் இயந்து கொள்ளுகின்றார்; 1957ல் அது ஒரு மிகப்பெரிய புதுமையாக இருந்திருக்கலாம்.


சட்டென்று நிகழ்காலத்தில் ஒரு இளம் பெண் இவருடன் வந்து பேசுகின்றாள் ; துடிப்பான பெண் ; தன்னுடைய துடிப்புத்தனத்திற்கு தன்னுடைய கன்னித் தன்மையை காரணக் காட்டுகின்றால் பின்னொரு சமயம். தான் இட்டாலிக்கி செல்லவிருப்பதாகவும் , இசாக்கிடன் பயணம் செய்யலாம என கேட்டு அவரது சம்மதம் வாங்கி, பின் தன்னுடன் வந்திருக்கும் இரு ஆண் நண்பர்களை காட்டுகின்றாள்.






ஒருவன் இசாக்கைப் போன்ற வேதாந்தி, அந்த இருமாப்பும் தெரிகின்றது. மற்றவன் ஒரு சமய போதகன்; அவனின் எளிமையும் தெரிகின்றது; சாரா என்ற இசாக்கின் முன்னாள் காதலிப் பெயர் கொண்ட இவளுக்கும் , தன் இரு நண்பர்களைப் பிடிக்கின்றது வெவ்வேறு காரணங்களுக்கு, பழைய சாராவைப் போலவே.

இதற்கிடையில் சதா வாக்குவாதத்தில் இருக்கும் ஒரு கணவன் மனைவி, இவர்களுடன் பயணிக்க நேர்கின்றது - அந்தப் பயணிகளின் , dysfunctional attidute, இந்த வண்டியில் வருபவர்களை உறைய வைக்கின்றது.





பின்னால் மாமனார் தன்னுடைய வாழ்க்கை அவர்களைப் போன்று தான் இருந்தது என்கின்றார்; மருமகளோ தான் அவ்வாறு ஆகிவிடக் கூடாது என்பதற்காகக்தான் , மணவிலக்கு பெற எண்ணியதாக சொல்கின்றார். மருமகள், அவர்களை நடு ரோட்டில் இறக்கிவிடச் சொல்ல , பயணம் , அவர்கள் இல்லாமல் செல்கின்றது.

ஓரிடத்தில் , இசாக்கும் மருமகளும், இசாக்கின் 96 வயது தாயைக் காணச் செல்லுகின்றார். இசாக்கின் மருமகளை, தன் மருமகள் என தவறாக நினைத்து அல்லது செனிலிட்டியில் (Senility), பழைய காண்டுடன் பேசுகின்றார். மாமியார் மருமகள் பிரச்சனை கால இட பரிமாணங்களை இந்தளவிற்கு மீறியிருக்கும் என் இருப்பது ஆச்சர்யம் தான்; 96 வயது தாய் சாதாரணமாக(?) பேசப் பேச, மருமகள் முகம் இறுகுகின்றது. பின்னால் , இசாக்கின் தாயின் பேச்சில் இருக்கும் தனிமைக் கொடுமையும், அதனால் இருகிப் போயிருக்கும் அவரது சிந்தனைகளும், தனது கணவனுள்ளும் ஊறியிர்க்கும் ஆச்சர்யத்தை வெளிப்படித்துவார்.





கூட்டத்துடன் இருக்கும் வாய்ப்பிருந்தும் தனிப்பட்டு போவது , இந்த வேதாந்திகளின் வாழ்வு முறையோ என சந்தேகித்திருக்கின்றேன். இந்தப் படம் "அதையே" இன்னமும் சிறப்பாகக் காட்டும் போது ஆச்சர்யம் தான்.

இசாக் மேலும் கனவுகள் காண்கின்றார்; தன் மனைவி எப்போதோ , தன் தம்பியிடமே (அது போல் தான் இருந்தது) சோரம் போய், அதை தன் கணவனிடம் சொன்னால், தன் கணவனின் வேதாந்த மனம் எப்படி எதிர் கொள்ளும் என ஒருவித நக்கலுடன் பேசியதை , தன் கனவில் மீண்டும் காண்கின்றார்.




இடையில் தன் மனைவின் மரணத்தை தானே வரவழைத்திருக்கும் சாத்தியமும் வசனங்களில் வருகின்றது. விக்கித்து எழுந்து அருகில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் தன் மருமகளிடம் ,ஏன் தன் மகனை விலகிச் செல்கின்றார் என வினவுகின்றார். மருமகளிடமிருந்த்ய் , தன் மகன், தன்னைப் போல ஒரு வறட்டு வேதாந்தி என அறிந்து வருத்தம் கொள்கின்றார்.

பின் அனைவரும் விருது வழங்கும் இடத்திற்குச் சென்று , பலத்த ஆரவாரத்துடன் விருதினைப் பெற்றுக்கொள்வது ஒரு நல்ல முரண் தான்.



விருதின் போது தன்னை பழைய ந்கழ்வுகள் ஆக்கிரமித்ததை சொல்லுகின்றார். சற்று காலம் கடந்து திருந்து ந்னைப்பது போல, தன் வேலைக்காரியிடம் தன்னை இனி மரியாதையாக கூப்பிடாமல், பெயரைச் சொல்லி கூப்பிட சொல்கின்றார். அதற்கு வேலைக்காரியோ , நக்கலுடன் , என்ன உடம்புக்கு என்னவாயிற்று , ஏன் இப்படியெல்லாம் பேசிகிறீர்கள் என செல்லி விலகுகின்றார்.

தன் மகனும், மருமகளும் சேரக் கூடிய வாய்ப்பிருப்பதைப் பார்த்தவாறு தூங்க முனைகின்றார். முதுமையின் சோகம் தாக்கும் போது சிறுவயது நினைவுகளை நினத்து அதன் குதூகலத்தி;ல் தூங்கப் பார்க்கின்றார். ஒரு வயதானவரின் மனப் போரட்டங்களை , இதை விடச் சிறப்பாக படம் எடுக்க முடியாது என நினைக்கின்றேன்.


மேலும் படிக்க

Tuesday, May 08, 2007

Cronicas / காலக்குறிப்புகள்

Cronicas காலக்குறிப்புகள்

Direction:: Sebastian Cordero / செபாஸ்டியன் கார்டெரொ


Language Spanish / ஸ்பானிஷ்


மனித உணர்ச்சிகளை அல்லது உணர்வுகளை தூண்டியபடி, அதனைத் தான் சொல்ல முனையும் கருத்துக்கு அல்லது எடுத்துக் கொண்ட களத்துக்கு ஆதரவாகக் கட்டி எழுப்புவது ஒரு வகை திரைப்பட பாணி. இதே பாணியில், திரைப்படக் கோணம், வேகம் மற்றும் காட்சியமைப்புகளை ஆவணப்படத்திற்கு ஒத்ததாக அமைப்பது, இந்த வகைப்படங்களை மேலும் தனித்துக் காட்ட உதவலாம்.அதற்கு ஒரு சிறப்பான உதாரணம் இந்தப்படம்.

ஈக்குவேடார் நாட்டின் ஒரு மூலையில் நடப்பதாக இந்தக் கதை. சிறு குழந்தைகளை யாரோ வண்புணர்வு செய்து , பின் கொன்று புதைத்துவிட அந்தக் குழந்தைச் சவங்கள் , 150க்கும் மேலான உடல்கள், கிடைத்த சமயமங்களில் இந்தத் திரைக்கதை அமைந்துள்ளது.
எனக்கு வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் ஆர்வம் எப்பொழுது வந்ததென்று தெரியவில்லை. 10ஆவது படிக்கும் பொழுது என நினைக்கின்றேன், ஒரு இலக்கிய தாகம் நிரம்பிய கும்பல்களுடன் சுற்றிக் கொண்டிருந்த சமயம். அந்த இலக்கிய கும்பல்களுக்கு இந்த "முற்போக்கு இலக்கிய" கும்பல்களுடன் தொடர்பு உண்டு. எங்கள் குடியிருப்புக்கு அருகில் ஒரு அரசு குடியிருப்பு ஒன்று இருந்தது. அந்தக் குடியிருப்பில் மாதம் ஒருமுறை திரைப்படம் போடுவார்கள். எங்கள் குடியிருப்பு மக்களும் அங்கே சென்று படம் பார்ப்பது உண்டு. இதெல்லாம் இந்த டிவீக்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பான காலகட்டங்கள். அப்படி சென்று பார்க்கும் மக்களுக்கு "நல்ல சினிமா" அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் நம் நண்பர் குழாம், அன்மையில் இருந்த ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு ஜப்பானிய படம் வாங்கி வந்தது. படத்திற்கு இரண்டு நாள் முன்பாகவே இந்த ஜப்பான்
படம் போடும் விஷயத்தை எங்களால் முடிந்த வரைப் பரப்பினோம். படம் போடும் நாளும் வந்து , குடியிருப்பின் ஒரு பகுதியில் படம் போட்டோம். மக்களும் ஆவலுடன் உட்கார்ந்து பார்க்க படம் ஆரம்பமானது ஒரு கிழவருடன். பேசிய மொழியும் புரியாது, கீழே ஒடிய சப்-டைடிலும் புரியாது, மக்கள் கசாமுசாவென்று திட்டி , படம் போடறாய்ங்களாம் படம், ஒரு சண்டை உண்டா என படம் போட்ட 10ஆவது நிமிடமே, காணாமல் போக, இலக்கிய கும்பல்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தத என்னைப் போன்ற அரைகுறைகளும் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனோம். வெகுகாலத்திற்குப் பின், என் பழைய நண்பனுடன் நான் அப்பொழுது பார்த்திருந்த அகிரோகுரசோவாவின் இக்ரு என்னும் படத்தைப் பற்றி பேச, அவன் "டேய் இந்தப் படத்தைத் தாண்டா நாம் ஜப்பான் படம்ன்னு சொல்லி போட்டம்ல, அதை மறந்திட்டியா" என்றான். திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆமா ஆமா மறந்திட்டேன் என்று புளுகினேன். இப்படியாக அறிமுகமான வெளிநாட்டுப்படங்கள், இந்த வெளி ஊர்சுற்றும் ஆவலுல்ல எனக்கு வெளி ஊர் பார்க்கும் பாவனையைக் கொடுத்ததால் , வெளிநாட்டுப் படங்கள் என்றால் ஒரு கிரேசாகிவிட்டது. பல படங்களில் இந்த ஊரை வேடிக்கைப் பார்க்கும் படலத்தில் கதையைக் கோட்டையும் விட்டிருக்கின்றேன், இந்தப் படமும் ஈக்வேடார் நாட்டு ஒரு ஊரை நன்றாக காட்டியிருந்தது. சில வெளிநாட்டு படங்கள் ( அதுவும் மூன்றாம் உலக) பார்க்கும் பொழுது இது "தாஜ்மகால்" போன்ற படமா அல்லது "பருத்திவீரன்" போன்ற படமா என்ற சந்தேகம் வந்து கொண்டே இருக்கும். இந்தப் படம் பார்க்கும் போதும் வந்தது. ஏதேனும் ஈக்வேடார் நாட்டு பிரஜை வந்து விளக்கினால் தான் உண்டு. மூன்றாம் உலக நாடுகள் எப்படி அடிப்படையில் அவ்வளவு ஒற்றுமை எனத் தெரியவில்லை. அதிலும் இந்த தென்அமெரிக்க நாடுகளும், நம் தமிழக அல்லது தென்னிந்திய ஊர்களூம் எப்படி ஒரே பாவனையைத் தரமுடியும் என்பது ஆச்சர்யம் தான். இந்த இரண்டு பிரதேசங்கலும் இந்த மேற்க்கத்திய ஆதிக்கத்திற்கு பின் தென்குடித் தோற்றத்தில் இருந்து இவ்வாறு உருமாறி காட்சியளிக்கின்றதா எனத் தெரியவில்லை.
ஒரு கேரள கிராம/ஊரை செட் போட்டது போல் உள்ளது இந்தப் படச் சூழல். இந்த இடங்கள், மக்கள் , மக்களின் உடலசைவு, எப்படி இப்படி ஒத்துப் போகும் என்பது ஆச்சர்யம் தான். படம் பார்க்கும் பொழுது இந்த ஆச்சர்யம் வந்து கொண்டே இருந்தது. மேற்கத்திய மக்களுக்கும் கிழக்கத்திய மக்களுக்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா அப்படியிருப்பின் அந்த வேறுபாட்டின் அடிப்படை என்ன என ஆராயும் ஒரு புத்தகத்தை
மேலோட்டமாக படித்த ஞாபகம் வருகின்றது. அவர்கள் எடுத்துக் கொண்ட உதாரணம் கிரேக்கத்தையும் , சைனாவையும் அடிப்படை வாழ்க்கையில் சைனாவில் விவசாயமும், கிரேக்கத்தில் வினியோகமும் என்பதாகக் கொண்டு எப்படி விவசாயம் ஒரு கூட்டு வாழ்க்கையை முன்னிருத்தி அதன் சட்டதிட்டங்களை, மக்கள் சிந்தனைகளை பாதிக்கும் என்றும், வினியோகம் அல்லது வியாபாரம் எப்படி தனி மனித வாழ்க்கையை முன்னிருத்தி
அதன் சட்டதிட்டங்களை , மக்கள் சிந்தனைகளை பாதிக்கும் என்று விரித்திருந்தது. இங்கே இந்த தென் அமெரிக்க அல்லது தென் இந்திய வாழ்க்கைமுறைகள் அடிப்படையில் விவசாயம் அதுவும் கூட்டுவிவசாயம், பொது வாழ்வாதரங்களைக் கொண்டு.... ம்ஹூம் இது ஆவரதில்லை. படம் பார்த்து சில நாள் கழித்து விமர்சனம் செய்ய உட்கார்ந்தால் இது தான் நடக்கும். படத்திற்கு திரும்புவோம்.....

ஈக்வேடார் நாட்டில் நடக்கும் திகீர் சம்பவம், அதைச் செய்தியாக்க அமெரிக்க நகரான மியாமியில் இருக்கும் ஸ்பானிஷ் டிவியின் செய்திக்குழு அந்த இடத்தில் டேரா போடுதல், அதன் பின் அந்த செய்திக்குழு , அதன் நடத்தைகள், ஈக்வேடார் மக்கள் , அவர்கள் சம்பவங்களுக்கு ஆக்கும் எதிர்வினை அதன் முறைகள், சட்டக் காவலாளர்கள், ஜெயில் மற்றும் குழந்தைகள், பேதைகள் என கதை சுற்றி வருகின்றது. இதில் அந்த டிவின் செய்திக் குழுவில் தலைவனாக வருபர் பல அமெரிக்க படங்களில் பார்த்த முகம் ( படம் ஒன்றும் ஞாபகமில்லை) சைடு ஆட்களில் ஒருவராக வருபவர், இந்தப் படத்தில் ஹீரோ வேடத்திற்கு ஒத்த வேடம்.. இவருடன் ஒர் ஸ்பனிஷ் அழகியும் , கேமரா மேனும். ஸ்பனிஷ் அழகி மரிசா, நிகழ்சி தயாரிப்பாளர். இவர் மியாமி டிவி செய்தி தொகுப்பாளர் மனைவியும் கூட


ஒரு ஆள் வினிசியோ அவனுடைய கிராமத்துக்குள் நுழையும் முன், நம்மூர் கிராமத்தில் குளிப்பது போல் குளித்துவிட்டு ,



அவனுடைய வேனை ஓட்டிக் கொண்டு வருகின்றான். அப்பொழுது அந்த ஊரில் ஒரு கொடூரன் செய்த கொலையில் சிக்கிய சிறுவர்களின் சவம் கண்டெடுக்கப்பட்டு அவர்களின் சவ ஊர்வலம் வருகின்றது. சவ ஊர்வலத்தை மியாமியில் இருந்து வந்திருந்த டிவி குழுவினர் எந்த வகைகளின் இந்த நிகழ்ச்சியை எடுத்து ரேட்டிங் பார்க்கலாம் என்னும் எண்ணவோட்டதின் பின்னே இயங்குகின்றனர். இறந்த ஒரு சிறுவனின் இரட்டைச்சகோதரனை பேட்டி எடுக்க விழைகின்றனர்.


மறுபுறம் வேன் ஓட்டிவந்த ஆள் பள்ளியிலிருந்து சீக்கிரம் வெளிவந்த அவனது மகனை வேனில் ஏற்றிக் கொண்டு வருகின்றான். பேட்டி எடுக்கப் போகும் சிறுவனோ தடாலென்று தன்னுடை விளையாட்டு பந்தை பிடிங்கிச் சென்றவனை துரத்த. சரியாக அந்த வேனில் வந்து மோதி அதன் டயருக்குள் சென்று விடுகின்றான்.



மக்கள் கொதித்து வேனில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தவனை பந்தாடுகின்றனர். அதனை டிவிக் காரர்கள் படம் பொறுமையாக, படம் பிடிக்கின்றனர்.




இந்த இடத்தில் படத்தில் இருந்த வேகம், காமிரா அசைவுகள் நன்றாக வந்திருந்தது. இசையேதும் இல்லாமல், இயற்கை சத்தத்துடன் ஒரு ஆவனம் போல படமாக்கியிருந்தது உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.. வேனில் மோதி இறந்த சிறுவனின் தந்தை , நீண்ட நாள் போராட்டத்திற்குப் பின் பிறந்த இரண்டு மகன்களையும், இழந்த சோகத்தில், வேண் ஓட்டியவனை நெருப்பில் கொளுத்த, நிறுத்தி நிதானமாக படமெடுத்தவுடன், டிவிக்குழு தலைவன் மனொலொ அவனைக் காப்பாற்றுகின்றான். போலிஸ் வந்து இருவரையும் கைது செய்து ஜெயில் போடுகின்றது. இந்தக் காட்சியைத் தென்னிந்தியாவில் எடுத்தது என்றால் யாருக்கும் சந்தேகம் வராது.


தெனமெரிக்க ஜெயில் , நம்மூர் திருவள்ளிக் கேணி மான்ஷன் போல் உள்ளது. இந்த அமெரிக்க ஜெயில்களை பார்த்து (படத்தில் தான்)பின் இந்த ஜெயில்களை (அடுத்த பட "திரைப்பார்வையில்" இன்னமும் விலக்கமாக) பார்க்க சற்று மனிதத்தன்மை ஆன ஜெயில்களாக தெரிகின்றன. ஜெயிலில் ஹம்மாக் உண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.




டிவிக்குழு இந்த ஜெயிலுக்கும் வந்து பேட்டி எடுக்க, வேண் ஓட்டிய வெண்டடொர், இவர்களிடம் கெஞ்சுகின்றார், எப்படியாவது காப்பாற்றும்படி. மனொலோ மறுக்க, வினிசியோ தனக்கு ஒரு ரகசியம் தெரியும் அதாவது தனக்கு அந்த கொடூரன் யாரென்று தெரியும். என்னைக் காப்பாற்றினால் சொல்வேன் என்கிறான். குழப்பத்துடன் திரும்புகிறார் மனொலொ..


அடுத்த நாள் சென்று , வினிசியொவிடம் நம்பகத் தன்மைக்காக ஒரு சான்று கேட்க, வினிசியோ , அந்த கொடூரன் ஒரு சிறுமியை புதைத்த இடத்தைச் சொல்கின்றார். மனோலாவும், கேமிராமேனும் அந்த இடத்திற்குச் சென்று தேடி சிறுமியின் சவத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் போலிசிக்குச் சொன்னால் டிவி விவரம் சேகரிக்க முடியாது என்று சவததை திரும்ப புதைத்துவிட்டி வந்து விடுகின்றனர். மனோலா வருத்தமடைகின்றார். இந்த வருத்தத்தின் ஆறுதலுக்காக மனோலாவும் மரிசியோவும் கள்ள உறவு கொண்டு விடுகின்றனர்.




இது அமெரிக்கர்களின் வேக வாழ்க்கையை ஈக்வேடாரில் கோடிட்டு காட்டுவதற்காக இந்த அவசர உறவுக்காட்சி எனத் தெரிவில்லை. பின் மனோலா வினிசியுடன் ஒரு நேர்கானல் அமைக்கின்றார். வினிசியோ பேசுவது சொல்வது எல்லாம் ஏதோ ஒன்றைக் கோடிட்டு காட்டுவதாக காட்சியும் வினிசியோவின் முகபாவங்களும், அவரது வசனங்களும் சொல்லுகின்றன. இந்த நேர்கானல் எனக்கு பிரைமல் ஃபியர் என்னும் படத்தில் ரிச்சர் கியரும் எட்வர்ட் நார்ட்டனும் நடித்த காட்சி கண் முன்னால் வந்தது.




மனோலா ஒரு மிகப் பெரிய சான்ஸ் கிடைத்தாக நம்புகின்றார். இதைத் தொடர்ந்து ஆளைப் பிடித்து விட்டால் தனக்கு பெரும் பெயர் கிடத்துவிடும் என நம்பி, அடுத்து இருக்கும் ஒரு வேலையைத் தல்ளிப் போடுகின்றார். ட் வினிசியோ தனக்கு ஆதரவாக டிவி நிகச்சி செய்தால் தான் மேலும் பேட்டி கொடுப்பேன் என்கின்றார். வினிசியோவின் நிறைமாதமாக இருக்கும் மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களை பேட்டி எடுக்கின்றனர்.


மனோலா வினிசியோவிற்காக தயாரித்த பேட்டி அவரது அனுமதிட்யில்லாமல் வெளியாகின்றது. மரிசியோவும் வினிசியோவின் மேல் குற்றம் வரும்படியான ஆதாரத்தை அதே நேரத்தில் கைப்பற்றுகின்றார். டிவி பேட்டி வெளியானவுடன் வினிசியோ விடுதலை ஆகி விடுகின்றார். மனோலா வினிசியோவை திரும்ப சந்திக்கும் முன் வினிசியோ கானாமல் போகின்றார். அதே நேரம் ஒரு நிரபராதியை விடுதலை செய்ய உதவிய மனோலாவிற்கு பெரும்பெயர் கிடைக்கின்றது




மனோலாவும் டிவி குழுவும் என்ன செய்கின்றனர்? வினிசியோ என்ன ஆனார்? அதிரடியான முடிவுடன் படம் முடிகின்றது.

திரைக்கதை, நடிகர்கள் குறிப்பாக வினிசியோவாக நடித்தவர், காமிரா எல்லாம் நன்றாக இருந்தது. படம் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதும் நிஜம். வேட்டையாடு விளையாடு பார்த்த பாவத்தை இதைப் பார்த்து போக்கிக் கொள்ளலாம்..


மேலும் படிக்க

Sunday, April 29, 2007

Children of Men / ஆண்களின் குழந்தைகள்

இயக்கம்: அல்ஃபொன்சோ கோரன்

குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது என்பது போல குடித்து விட்டு படம் பார்க்க கூடாது என்று ஒரு சட்டம் வரவேண்டும். அதுவும் வலைப் பந்து / உருளைகட்டை பந்து(baseball) என்று தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே அரட்டை அடித்து விட்டு குடித்து விட்டு தின்று விட்டு, எல்லா உணர்வுகளும் இழந்து, எல்லோரும் போன பின் அடடா, இதை நாளைக்கு திருப்பிக் கொடுக்கவேண்டுமே என்று அவசர கதியில் தனியே உட்கார்ந்து படம் பார்க்கக் கூடாது என்று கூட சட்டம் போடலாம். என்ன செய்வது அப்படிப் பார்த்த படம் தான் இது. ஏதோ ஒரு காட்சியில் தூங்கி சற்றென விழித்து எந்தக் காட்சியை தவற விட்டேன் என்பதும் தெரியாமல் பார்த்த படம் தான். இவ்வளவு குளறுபடிக்கு அப்புறமும் இந்த பட விமர்சனம் தேவையா என்றால். தேவை எனலாம். திரும்ப எப்பொழுதோ, இந்தப் படம் நினைவில் இருந்து சுத்தமாக அகண்றவுடன், திரும்பப் பார்த்தால் வரும் விமர்சனம் எப்படி இருக்கும் என்று ஒப்பிட்டு பார்க்கவும் வசதிப்படும். காட்சிகள் குளறுபடியாக விமர்சனத்தில் இருந்தால் பின் ஈனத்துவம் மேல் பழி போட்டுக் கொண்டால் போச்சு.

2020ல் நடப்பதாகக் கதை ஆரம்பமாகின்றது. 17 வயது நிரம்பிய உலகின் மிக இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று ஒரு காபி கடையில் டிவி செய்தி அறிவிக்கின்றது. "மிக இளைஞர்" என்ற பதம் தான் கதைக் கரு.



கதாநாயகன் என்னும் தியோ கடையிலிருந்து வெளியே வந்து, வாங்கிய காப்பியில் வோட்கா கலந்து கொண்டிருக்கும் போது ஒரு பெருத்த வெடிச்சத்தம். காப்புக்கடை நாசம். கொய் என்ற சத்தத்துடன் தியோ நடக்க, லண்டன் நமக்கு அறிமுகமாகின்றது. காட்சிகள் ஒரு சாம்பல் நிறத்தில் இருப்பது இந்த படத்திற்கு மிகவும் ஏற்றதாகப் பட்டது. லார்ட் ஆஃப் த ரிங் படத்தில் அந்த சாகவரம் பெற்ற இனத்தவரது தலைவன் வீடு வரும் காட்சிகளது சாம்பல் ந்றத்தவுடன் இந்த சாம்பல் நிறம் சற்று மாறிய நிறம்.
தியோ நடக்கிறார். கொய்ய்ய் என்ற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. அலுவலகம் செல்லுகின்றார். அலுவலகம் தற்போதைய அலுவலகம் போலத்தான் இருக்கின்றது என்ன ஃப்ளாட் பானல் மானிட்டர் மட்டும்ம் சற்று மாற்றம். :-).



அலுவலகமே சோகத்தில் இருக்க, இது தான் சாக்கென்று , அதிகாரியிடம் சென்று வீட்டிலுருந்து வேலை பார்ப்பதாக் சொல்லி வெளியேறுகின்றார். "வீட்டிலிருந்து வேலை" என்பதை I.T நண்பர்கள் "வீட்டுற்காக வேலை" என்று வார்த்தை விளையாடு காட்டுவார்கள். வயித்தெறிச்சலாக என்னைப் போன்று 8ல் 7 மணி நேரம் மீட்டிங்கில் மாரடிப்பவர்களுக்கு , வீட்டிலிருந்து வேலை BPஐக் கொஞ்சம் கூட்டும்.

ரயிலில் திரும்ப வர, உலக நகரங்கள் நிர்மூலமான கதை தெரிகின்றது லண்டன் தவிர. எதனால் என்று சரியாக தெரியவில்லை. மூன்றாம் உலகப்போராகவோ அல்லது இந்த பெட்ரொல் சிலுவைப் போரின் முடிவாகக் கூட இருக்கலாம். லண்டன் மட்டும் தப்பியதால் லண்டனின் முக்கிய பிரச்சனையாக சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் ஆகிவிட்டது போல் அரசு சார் விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. ரயிலுக்கு வெளியில் இருந்து ஏதேதோ கூட்டம் கண்டெதையும் எறிந்து தாக்கு கின்றன. ரயில் ஓரிடத்தில் நிற்க வெளியே வரும் தியோ முகத்தில் கூண்டுகள் (நம் முகத்திலும் தான்) கூண்டிற்குள் வேற்று மக்கள், ஏதேதோ மொழியில் புலம்பிக் கொண்டிருக்க, எனக்கு ராமேச்சுவர அகதிகள் முகாம் ஞாபம் வந்தது. இந்த தேவடிய இந்தியமாதாகீசோத் கும்பல்களும் நம் சகோதரர்களை அப்படித்தானே அடைத்திருக்கின்றார்கள் என்ற நினைப்பும் வந்தது.




டப்பா ஸ்டேசனில் அடிக்கொரு போலீஸ். வெளியே வந்தால் ஒரு ஹிப்பிக் கிழவர். இந்தப் படத்தில் எனக்கு தெரிந்த முகம் மைக்கேல் கெய்ன். பிளேம் இட் ஆன் ரியோ என்னும் படத்தில் எனக்கு அறிமுகமானவர் இவர். மற்றொருவர் அப்போழுது அவ்வளவு சுவாரசியமில்லாத டெமி மூர். இதை பார்த்து பல வருடங்கள் இருந்தாலும் இந்தப் படத்தின் காட்சிகள் இன்னமும் ஞாபகம் இருக்கு. காட்சிகள் அப்படி ஒன்றும் மனதைத் தொடும் காட்சிகளும் இல்லை. எனக்கும் ஞாபகசக்தி அவ்வளவாகக் கிடையாது. ம்ம் வேறன்ன அந்த வயதில் வேறெதையோ தொடத்தூண்டிய செகைக் காட்சிகள் தான் ( நன்றி இராம.கி ) கெயின் வீட்டிற்கு செல்லுகின்றார்கள். கெயின் வீடு ஒரு ஒதுக்குப் புறம். வீட்டில் கோமா நிலையில் இருக்கும் அவரது மனைவி. அவரது வீட்டில் புகைப்படங்களாக, கதைச் சூழலைப் பற்றிய சிறு வரலாறு.




வீட்டில் தியோவின் படமும் இருக்கின்றது - குடும்பத்துடன். கிழவரும் தியோவும் கதை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த உலகம் எப்படி பிள்ளை பெறும் வரம் இழந்தது என்ற கேள்விகளைக் கேட்டு , கூடவே மனித புறத்திட்டு (human project) பற்றி கோடிகாட்டி பேசுகின்றனர். [ இங்கே இராம.கியின் சொல்லாக்க முயற்சிகள் பற்றி என் எண்ணத்தைச் சொல்ல ஆசை. இந்த செகை, புறத்திட்டு போன்றவற்றை என்னால் நடையோடையில் புகுத்த முடிவது கண்டு மிக ஆச்சர்யம்.. ஆங்கில சொற்களுக்கு, ஆங்கில சொல் ஒசையின் அடிப்படையில், தமிழ் சொல் வேரிலிருந்து வார்த்தை அமைக்கும் முறையை, தமிழ்சார் கல்விக்கூடங்கள் சுவீகரிக்க/அங்கீகரிக்க வேண்டும். இந்த இணையத்தில் தமிழில் எழுதபவர்களும் முயற்சி செய்து இவரது சொல்லாக்கங்களை ஏற்றால், விரைவில் பெரும் பெரும் அறிவியல்/தத்துவ ஆக்கங்களை மொழிமாற்றம் செய்ய இந்த்ச் சூழலே நம்மை தயார் செய்யலாம்]

தியோ அடுத்த நாள் எழுந்து வெளியே செல்ல முற்படுகையில், இரு குண்டர்களால் கடத்தப்படுகின்றான், குண்டர்கள் அவனைச் சேர்க்கும் இடத்தில் அவனுக்கு ஒரு ஆச்சர்யம், வெகு நாள் பிரிந்திருந்த அவனது மனைவி அவனைச் சந்திக்கின்றாள்.




அந்த மனைவியாக நடித்திருந்தவரும் எனக்கு அறிமுகமானவர் தான் ஜீலியன் மூர். ஆரம்பகாலத்தில் இவர் சிறு வேடங்களில் தான் வருவார். அவ்வாறன ஒரு படத்தில் பிள்ளைபேறுக்கு ஏங்கும் ஒரு பணக்காரராக, தாந்திரிக்களில் நம்பிக்கை உடையவராக வருவார். ஒரு காட்சியில் படுத்துக் கொண்டு தன் கால்களைத் தூக்கிக் கொண்டு, தன் கணவனையோ அல்லது வேறு யாரையோ, இப்போழுது நல்ல சமயம், சீக்கிரம் வா என கலவிக்கு கூப்பிடுவார். காட்சி செகையாகவோ, காட்சிவக்கிரமாகவோ, தெரியாமல் பிள்ளைபேற்று ஏக்கம் தெரியும் படி நடித்த அந்தப் படத்தை , பல நாட்கள் என்ன படம் என்று தெரியாமல் திகைத்திருக்கின்றேன், இப்படி பலபடங்களை அரூபக் காட்சிகளாகத்தான் என் ஞாபகச் சக்தி வைத்திருக்கின்றது. இன்னமும் பின்னால் போனால் 9ஆவது அல்லது 8வது படிக்கும் சமயம் பார்த்த ஒரு படத்தின் காட்சி. ஒரு வேன் அல்லது டிரக். டிரக்கில் வெடி குண்டுகள். அந்த டிரக் ஒரு நூல் இல்ல கயிறு பாலத்தில். அந்த சீன் ஒரே பசுமையான இட சூழலில் இருந்த ஞாபகம், இந்த டிரக்கை இருவர் ஓட்டிக் கொண்டு போவார்கள். அருள் தியேட்டர் என்னும் ஒரு தியேட்டரில் பார்த்த படம். என்ன படம் என்று பலகாலமாக தேடிக் கொண்டிருக்கின்றேன்....
சரி கதைக்கு வருவோம் -- ஜீலியனும் தியோவும் உரையாடுகின்றார்கள். 3 வயது குழந்தை இறந்ததால் பிளவான குடும்பம் இது . இருவரும் இளவயதில் அக்டிவிஸ்ட் (இயக்கத்தினர் ?)ஆக இருந்தவர்கள், பிள்ளை இறந்தவுடன் மனைவி தீவிர ஆக்டிவிஸ்டானதும் கணவன், எல்லாவற்றின் மீது நம்பிக்கையிழந்தவனாக மாறிப்போனதும் தெரியவருகின்றது நமக்கு. மனைவி ஒரு உதவி கேட்கின்றார், பணம் தருவதாக சொல்லிக் கொண்டு.
அதாவது ஒரு பென்ணிற்கு ( சட்டம்சாரா குடியேறிக்கு) விசா ஏற்பாடு பண்ணித் தர. யோசிப்பதாக சொல்லி உறங்கப் போகின்றார் தியோ.

அடுத்த நாள், குடியேற்ற அதிகாரத்தில் இருக்கும் ஒரு நெருங்கிய உறவினரை சந்தித்து விசாவிற்கு கேட்கின்றார். இந்த இடம் மட்டும் தான், சமூகப்பிளவில் அடுத்த பக்கத்தில் இருப்பவர் முகம் இந்தப் படத்தில்.



அப்படி ஒன்றும் அவர் சந்தோசமாக இல்லை என்பதை, ஒரு 18,19 வயது இருக்கும் (அரிதான இளைஞர் கூட்டத்தைச் சார்ந்த) ஆனால் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு, வீடீயோ கேமில் முழுகி இருக்கும் மகனைக் காட்டி சொல்கிறது படம். இன்னும் நூறு வருடங்கள் போனால் ஒன்னும் இருக்காதே, எந்த நம்பிக்கையில் எப்படி உத்வேகமாக இருக்க முடிகின்றது என்ற தியோ வினாவிற்கு நான் இந்த நிமிடத்திற்காக வாழ்கின்றேன் என்கிறார். வெளியே ஒரு பன்றி (சிலை) பறக்கின்றது..





திரும்ப மனைவியைச் சந்தித்து விசா கொடுக்கும் போது, இது தனிவிசா இல்லை. நான் கூட இருக்கவேண்டிய கூட்டு விசா என்று கூறி கொடுக்கின்றார். இதனால் இவர் மனைவியுடன் போக நேரிடுகின்றது. காரில் ஏறும் போது , இவர் விசா வங்கிய பெண்ணும் அறிமுக மாகின்றார். கார் செல்லும் போது தூரத்தில் ஒரு கலவர கும்பல் இந்தக் காரை துரத்து கின்றது. இவர்கள் தப்பிக்கும் முன் இருவர் பைக்கில் வந்து தியோவின் மனைவியைச் சுட்டு விடுகின்றனர்.




மனைவியை அடக்கம் செய்து விட்டு மனைவி தலைமை வகித்த குடியேறிகள் நலனுக்காக இருக்கும் ஒரு அமைப்பின் இடத்திற்கு செல்லுகின்றனர். பின் என்ன நடந்தது என்பதை வெள்ளித் திரையிலே, டிவித் திரையிலே, மானிட்டர் திரையிலோ காண்க

இந்தப் படத்தின் கரு அதாவது மக்கள் இனப்பெருக்க சக்தியை இழந்து விடுகின்றனர் என்பது சுவாரசியமான ஒன்றாகப் பட்டது. நியூக்ளியர் மழை பெய்து, புல் பூண்டோடு இனம் சடாரென்று அழியப் போகின்றது என்பதாக இல்லாமல், இனப்பெருக்க சக்தியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மனித இனம் அழியக்கூடிய சாத்தியக்கூறு சுவாரசியமானதாக இருந்தது. (தொடர் அழிவுகளோ, அழிவுச் செய்திகளோ நம் மனதில் கூடிய விரைவில் ஒரு வித நம்ப்னெஸ்ஸை கொண்டுவரக்கூடிய நிஜ சாத்தியக்கூறுதான் வயற்றைக் கலக்குகின்றது). மனித இனம் எப்படி இதை எதிர்கொள்ளும் என்னும் பதில் அவ்வளவாக இந்தப் படத்தில் இல்லாமல், அதே சமயத்தில் படத்தில் நிலவிய ஒரு போர்க்கால சூழல் உள்ளுர ஒரு நகையைக் கொடுத்தது எனலாம். இந்த மனித புறத்திட்டு என்னும் நம்பிக்கைக்கீற்று சுத்தமாக இல்லாமல் இந்தப்படம் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாய் இருந்திருக்குமா எனத் தெரியவில்லை.


மேலும் படிக்க

Sunday, April 22, 2007

Andrei Rublev / ஆண்ட்ரெய் ரூப்லெவ்

இயக்கம் :: ஆண்ட்ரெய் டார்கோவ்ஸ்கி

60களில் ரஷ்யாவின் மட்டுறுத்தலுக்கு உட்பட்ட படம் என்று டிவிடியின் பின் அட்டையில் பார்த்தவுடன் இதைப் பார்க்கலாமோ எனத் தோனியது. டைரக்டர் பெயரும் , படப்பெயரும் மிக நெருங்கியது கூட ஆவலைத் தூட்டியிருக்கலாம். டார்க்கோவ்ஸ்கி பெயர் கேள்விப்பட்ட மாதிரி இருந்தது ஆனால் முழுதாக தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் படம் பார்க்கும் முன் கூகிளிடவும் கஷ்டம். (இல்லாவிட்டாலும் சில சமயம் கஷ்டம் தான்). நாடோடி மண்ணன் பாணியில் கருப்பு வெள்ளை மற்றும் கலர் என்று பின் அட்டை பட நிலவரம் சொல்லியது. படக்கதையைப் பற்றி ஒன்றும் காணவில்லை.

ரஷ்யன் மற்றும் ஜெர்மானிய படங்கள் மீது அவ்வளவு உற்சாகம் ஏற்படுவதில்லை இப்போதெல்லாம். காரணம் இந்த உற்சாகம் என்னும் வார்த்தைதான். இது வரை பார்த்த படங்கள் இந்த உற்சாகம், கிண்டலான நகை போன்று மனதை குதூகலிக்கவிடாமல் , ஒருவித சோகம் சார்ந்த, மனவிரக்கம் கொள்ள, மனதைச் சோதிக்க வைக்கும் படங்களாக இருப்பது தான். இந்த இசையோ இன்னமும் கேட்க வேண்டாம். ஏன் இவர்களுக்கு இப்படி? இல்லை நான் பார்த்த படங்கள் தான் இப்படியா?

பட ஆரம்பித்தவிடன் ஒரு பரபரப்பான சூழல். ஓரிடத்தில் சிலர் அங்குமிம் இங்கும் ஏதோ எடுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த காமிராவிம் கூடவே சுத்துகின்றது. பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் காமிரா ஒரிடத்தில் இருக்க கலைஞர்கள் முன் நடித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது காமிரா கோணம் நகரும் , முன் செல்லும் அல்லது பின் வாங்கி நிற்கும். இதிலோ ஆரம்பத்தில் இருந்து ஓட்ட அசைவு தான். காமிராவும் மக்களும் ஏதோ ஒரு நடன ஒழுங்குடன் அசைந்து கொண்டிருக்கின்றார்கள் கட்டிட மாடிக்கு ஒருவர் ஓடுகின்ரார். காமிராவும் ஓடுகின்றது. மூணு அல்லது நாலு மாடி தொலைவில் இருந்து காமிரா கோணம் ஜன்னல் வழியே பாய்கிறது, கீழே மக்கள், சற்றுத் தொலைவில் ஒரு நீண்ட ஆறு அதில் ஓடங்கள் அல்லது கப்பல்கள் ஏதோ ஒரு ஓழுங்கில் அல்லது ஒழுங்கிலாமல். கீழூ கயிரை அறு என்று ஒருவர் கத்த கயிறு அறுபட ஏதோ ஒன்று மேலே பறக்கின்றது. ஒருவர் பலூன் போன்ற ஒன்றில் தொங்கிக் னொண்டிருக்கின்றார்.



நான் பறக்கின்றேன் பறக்கின்றேன் என்று கத்த பலூன் வேகமாக நகருகிறது. காமிராவும் தான். பலூன் வேகமாக நகர, கீழே நிலமும் வேகமாக நகருகின்றது. மேலே இருந்து கீழே உள்ள இடைவெளி குறைய குறைய தரை வேகமாக தெரிந்து தடாலென்று ஒரு சத்தம். பார்த்தால் பறந்தவர் கீழே கிடக்கின்றார். பாரதிராஜா கட் சாட் போல (டார்கோவ்ஸ்கி மன்னிக்க) ஒரு குதிரை கீழே விழுந்து திரும்ப மேலெழுகின்றது. இது என்ன படிமம் என்று தெரியவில்லை. நெட்டில் தேடவும் அலுப்பு. இந்தப் படம் முழுவது குதிரை படிமம் வந்து கொண்டே இருக்கின்றது. படிமங்கள் மேலே ஏனோ ஒரு சுவாரசியம் குறைந்து வருகின்றது. யாரோ போடும் விடுகதையை எதற்காக யாரோ அவரவர் வழியில் விளக்கிக் கொள்ளவேண்டும்? இது என்ன விளையாட்டு இது? இந்த எலிட்டிசத்திற்கும்(மேட்டிமைத்தனம்?) படிம விளையாட்டிற்கும் ஏதோ ஒரு போலித் தொடர்பு போல ஒரு உணர்வு. இந்த தமிழ் இணையங்களில் இந்த படிம விளையாட்டை ஓரிருவர் ( எனக்கு பிடித்தவர்கள் கூட :-) ) அளவுக்கு மீறி விளையாடி வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்ததால் விளந்த பின் விளைவா இது எனத் தெரியவில்லை.

அந்த பட முன்னுரைக்கு (?) பின் கதை கதைமாந்தருடன் ஆரம்பமாகின்றது. ஒரு ரஷ்ய ஒதுக்குப்புற கிறித்தவ கூடாரத்திலிருந்து மூவர் (ரூப்லாவும் அவர் நண்பர்களும்) ஊரைவிட்டு விலகி மாஸ்கோ செல்ல முனைகின்றார்கள். மாஸ்கோவில் சிற்ப மட்டும் ஓவிய தொழிலிற்காக செல்ல திட்டமிட்டு செல்கின்றனர். சதுப்பு நிலங்கள் - மழை -




ஏனோ இதைத் தொடரும் காட்சி எப்போதோ பார்த்த பெர்க்மானின் செவன்த் சீல் என்னும் மற்றுமொரு கருப்பு வெள்ளை படத்தை நினைவீட்டியது. மரணம் செல்லும் இடங்களாக இருந்த அந்தப் படத்தை மற்றுமெருமுறை பார்க்கவேண்டும். தூரத்தில் ஒரு கும்பல் மழைக்கு ஒதுங்கி இருக்கின்றது. உள்ளே மக்கள் குதூகலமாக குடித்துக் கொண்டு இருக்க, ஒரு விதூகன் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார் பாதிரிகளை கிண்டலித்தவாறு.




மிகவும் குதூகலமாக ( இந்தப்படத்தில் முதலும் கடையுமாக) இருந்த இந்த இடத்தில் அந்த பாதிரிகளும் மழைக்கு ஒதுங்க, ஏனோ அந்த இடமே சோகத்தில் ஆழ்கின்றது. பாதிரிகளில் ஒருவர் விதூகனை, சாத்தானோடு ஒப்பிடுகின்ரார். இப்பொழுது குதூகலம் போன இடம் தெரியாது. பாதிரிகளில் ஒருவர் சற்று லேட்டாக நுழைய , பின்னாடி அரசாங்க காவல் நாய்கள் அந்த இடத்திற்கு வந்து அந்த விதூகனை நாலு சாத்து சாத்தி கைது செய்து இழுத்துப் போகின்றார். 1400களில் ரஷ்யாவில் கிறித்தவம் அதனது அந்தக்கால இருகல்களுடன் உள்ளே நுழைந்த சமயம் போலும்.

படம் முழுவதும் ரூப்லெவ் என்பவரின் இருபதுகால ஆண்டுகளின் பல சம்பவ கோர்ப்பாக, அவர் பாதிரியாக இருந்த மனநிலையை காட்டியவாரு , அந்தக்கால ரஷ்ய வரலாற்றையும் கோடிட்டு காட்டி இருக்கின்றது.


அடுத்த சம்பவமாக, ரூப்லெவ், அந்தப் பகுதியில் இருந்த நாட்டுப்புற சமய கொண்டாட்டங்களை, ஒரு பாதிரியாக பார்வையிட நேருகின்றது. அந்த ஊர் வசந்த விழா போல ஆண்களும் பெண்களும் உற்சாகமாக ஓடிக்கொண்டும் அங்கங்கே கலவியில் ஈடுபட்டுக் கொண்டும் இருக்கின்றனர். பாதிரி திகைப்புடன அவர்களை பார்க்கின்றார். விலகி ஒதுங்காமல், ஏனோ ஒளிந்திருந்து அவர்களை கண்ணொட்டம் இடுகின்றார். சில ஆண்கள் அவரைப் பிடித்து கட்டி வைக்கின்றனர். உங்கள் குருமார்களிடம் சொல்லி எங்களைத் தொல்லப் படுத்துவாய் என்று அவரை ஏசுகின்றார்கள். (வார்த்தை விளையாட்டு அல்ல). அப்போழுது அவரை மார்ஃவா என்ற ஒரு பெண் சந்திக்கின்றாள். இருவரும் அவரவர் கண்னோட்டத்தை வெளிப்படுத்தும் உரையாடல் நன்றாக வந்திருந்தது.




அவரது கையும் காலும் கட்டியிருக்க அந்தப் பெண் அவரிடம் காதலைப் பற்றி பெருமை சொல்லி அவரை கட்டி அணைக்கின்றாள். மிகவும் பதட்டமானவராகி தன்னை அவிழ்த்துவிடச் சொல்ல, அந்தப் பென்ணும் அவரை விடுவிக்கின்றாள். பதட்டத்துடன் அந்த இடத்திலிருந்து அவர் ஓட, அவர் ஓடுவதை ஒரு நக்கலுடன் பார்த்துக் கொண்டே இருக்கின்றாள் அவள்



அடுத்த நாள் அவர் தன் குழுவினருடன் ஒரு படகுத் துறையில் சேரவும், அங்கே அரசாங்த்தினர், நாட்டுபுற சமய கொண்டாட்ங்கள் நடத்திவர்களை துரத்திப் பிடிக்கின்றது. ஒரு கடவுள் கொள்கையில்லாததால் அவர்களுக்கு அது நிகழ்கிறது என்று இவரது குழுவில் இருந்த ஒருவர் சொல்கின்றார். இவரது படகுக்கு மிக சமீபமாக, அந்த மார்ஃவா என்ற பெண் போலீசிடமிருந்து தப்பி ஆழமான ஆற்றில் கரை தெரியாத திசை நோக்கி நீந்தி செல்கின்றாள். இவர்கள் ஏதும் செய்யவில்லை.




மாதாகோயில் கட்டடவேலை மெதுவாக நடக்கின்றது. இளவரசரின் கட்டிட வேலை அது. ஒருவழியாக அந்தக் கட்டிடம் எழ, இளவரசரின் தம்பி டார்டார் என்னும் ரஷ்யர் இல்லா இனத்தாரின் உதவியுடன் அந்த இடத்தை நிர்மூலம் செய்கின்றான், இந்த டார்டார் என்று அழைக்கப்படும் இனம் சீன இனத்தவர் போல் உள்ளனர், அந்த சமயம் வலுவுடன் இருந்த மங்கோலியராக இருக்கக்கூடும் என நினைக்கின்றேன், கருப்பு வெள்ளைப்படத்தில் நான் பார்த்த உச்சகட்ட வன்முறை இதில் தான். ஒருவனது தொண்டை அறுந்து இரத்தம் பீரிடுகின்றது, மாடு எரிகின்றது. ஆமாம். உண்மையிலேயே எரித்துள்ளனர்.



வனவிலங்கு தடுப்புச்சட்டம் எல்லாம் இல்லை போலும்.

இந்த சமயம் , ரூப்லவ்விற்கு ஒரு மனநிலை குன்றிய ஊமைப் பெண் நட்பாகின்றாள்.




அவள் மனநிலைக் குறைவை, மாதாக் கோவிலில் வந்து சிறுநீர்கழிவதாக காட்சியமைத்திருக்கின்றார் டைரக்டர். இந்த செர்மானிய/ரஷ்யப் படங்களில் இது ஒன்று - சிறுநீர் கழிவு ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் அது நடக்கும், பாஸ்பைண்டர் படமொன்றில் நிறுத்தி நிதானமாக இது ஒரு கழிவரையில் நடக்கும்.

இந்தப் பெண்னை டார்டார் இனத்தவன் எட்டாவது மனைவியாக, ரூப்லாவ் ஒன்றும் செய்ய இயலாநிலையில் நடக்கும்.




ரூப்லாவிற்கு இது மேலும் மனவிரக்கத்தைக் கொடுக்கும்.

கதை ஒரு கோயில் மணிசெய்பவனிடம் சென்று அடைகின்றது. கோயில் மணிகள் செய்யும் இடத்தில், கொள்ளை நோய் வந்து, அந்த நிபுனர்களை கொள்ள, ஒரு இளைஞன் தனக்கு தன் தந்தை, அந்த நிபுனத்துவத்தை சொல்லிக் கொடுத்திருக்கின்றார் என்று சொல்லி அந்த கோயில் மணி செய்யும் வேலையை வாங்குகின்றான். மிக விஸ்தாரம்மாக அந்த பிரமண்டா கோயில் மணி செய்வது படமாக்கப் பட்டிருக்கின்றது. கொஞ்சம் சஸ்பென்சுடனும் கூட.




அந்த வேலை என்னவானது என்ற சஸ்பென்சையாவது விடலாம் என்று நினைக்கின்றேன்.

படமுடிவில், ரூப்லாவின் நிஜ கலைவேலை கலரில் வருகின்றது



கடைசியாக பட இயக்குனருக்கு பிடித்த, எனக்கு புரியாத, குதிரை படிமத்தின் கடைசி காட்சியும் கலரில்



இந்தப் படத்தில் எனக்கு பிடித்தது இதன் காட்சியமைப்பு, காமிரா கோனத்துடன்.

சில இடங்களின் காமிரா காட்சிகளில், புகைப்பட ஒழுங்குடன் மிக அற்புதமாக வந்திருந்தது.



பின் தொடரும் இசையும் கூட. இந்த டைரக்டர், அந்தக்கால கிறிஸ்தவ மத கட்டுப்பாடல் அந்த சமுதாயத்திற்கு தேவை என்று நினைத்தாரா, தேவையில்லை என்று நினைத்தாரா என என்னால் உணரமுடியவில்லை. இந்தப் படத்தில் வரும் விரிவான, யேசுவை சிலுவையில் அறையும் சீன், எதற்காக என என்னால் ஊகிக்கமுடியவில்லை. ரூப்லாவின் மதப்பற்றின் ஆழத்தில் இருக்கும் விஷயமா எனவும் யோசிக்கலாம். பாகன் வழிபாட்டுமுறையை எந்த நோக்கில் பார்த்தார் என்வும் எனக்குத் தெளிவாகவில்லை. . இந்த்ப் படம் 60களின் ஏன் "ரஷ்யாவில்" தடைசெய்யப்பட்டது என உணரமுடிகின்றது. நிறுவண கிறிஸ்தவ மத கோட்பாடுகளை ஸ்டாலினிச கம்யூனிசத்துடன் ஒப்புமைபடுத்தி இந்தப் படத்தில் பார்க்கலாம் எனவும் தோனுகின்றது.

பட அனுபவம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது என நிச்சயம் சொல்லலாம்.


மேலும் படிக்க